Monday, March 28, 2005

நமது கிரிக்கெட் அணி செய்த மகா சொதப்பல்!

பாகிஸ்தான் 3வது டெஸ்டில் வெற்றி பெற்றது!

இந்திய அணி தனது பைத்தியக்காரத்தனமான (அபத்தமான!) அணுகுமுறையாலும் (over defensive), தன்னம்பிக்கையை இழந்த காரணத்தாலும், பெங்களூரில் நடந்த 3-வது டெஸ்ட் பந்தயத்தில் மிக அனாவசியமாக தோற்றது என்றே தோன்றுகிறது. இவ்வளவு வருடங்கள் ஆடிய தெண்டுல்கரே இப்படி சொதப்பியது அசிங்கமாகவும், அவமானமாகவும் உள்ளது. அவர் மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்திருக்க வேண்டாமா? Tendulakar MUST BE TOLD IN CLEAR TERMS that he should play a much more active and positive role in crisis!!

Clearly there was NO BIG DEVIL in the pitch! சேவாக் அவுட்டானவுடனே, மற்றவர்களை டிராவுக்கு விளையாடும்படி Team management (ஜான் ரைட், கங்குலி, டிராவிட் ..) பணித்தது என்றால், அவர்களை கட்டி வைத்து உதைக்க வேண்டும்! லஷ்மண், கங்குலி, கார்த்திக் போன்றவர் டிராவிட் போல் மட்டை போட்டு ஆடுவதற்கு பொதுவாக லாயக்கற்றவர்கள் என்பது தான் உண்மை. தங்களது இயற்கையான ஆட்ட பாணியை கடைபிடித்திருக்க வேண்டும். என்ன ஒரு கேவலமான தோல்வி!!!
There is nothing wrong in losing but the manner in which we (our star studded team!) capitulated is atrocious and reprehensible, to say the least! (கோபமாக இருக்கும்போது தமிழை விட ஆங்கிலம் சற்று சரளமாக எனக்கு வரும்!)

இத்தோல்வியால் ஒரு நல்லது நடந்தால் மகிழ்ச்சி! கங்குலியை தலைமைப் பதவிலிருந்தும் (அணியிலிருந்தும்) கழற்றி விட்டால் நலம்! நடக்கும் என்று திடமாக நம்புகிறேன்! Anyway, he has just been a passenger in recent times! கைஃப் அல்லது யுவராஜ் இந்திய அணிக்குள் நுழைய வழி பிறக்கும். டிராவிடை கேப்டனாக நியமிப்பதற்கான நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, March 25, 2005

பல்லவியும் சரணமும் - பதிவு 20

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. சோக்காய் வாங்கி தின்னுபுட்டு உட்டானய்யா கொட்டாயி...
2. செப்புச்சிலை போல உருண்டு திரண்டிருப்பாளாம்...
3. உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..
4. அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி ...
5. என்ன சொல்லவோ மயக்கமல்லவோ, கன்னி அல்லவோ ...
6. உன்னாலே பசி தூக்கம் இல்லை, எப்போதும் ...
7. நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை நான் பதிக்க...
8. கல்யாணமே வைபோகம் தான் பூந்தேரிலே ஊர்கோலம் தான்...
9. உன் சேலையில் பூவேலைகள், உன் மேனியில் ...
10. நாயகன் ஜாடை நூதனமே, நாணமே ...
11. பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள்...
12. நான் இருந்தேன் வெறும் மெய்யெழுத்தாய் ...(EASY!)


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, March 21, 2005

பல்லவியும் சரணமும் - 19 --- பதில்கள்!

1,2 மற்றும் 8-ஐ தவிர்த்து மற்ற சரணங்களுக்கான பல்லவிகள் இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் காணலாம்! For the first time in 19 episodes of பல்லவியும் சரணமும், RESPONSE was a bit slow :-(

1. தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது, தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது --- வெள்ளிக்கிழமை விரதம்

2. நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என் மேனி என்னாகுமோ? --- நல்ல நேரம்

8. மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் ---- திரைப்படம் நினைவில்லை!


என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, March 20, 2005

பல்லவியும் சரணமும் - 19

பல்லவியும் சரணமும் - பதிவு 19

Some more pallavis are yet to be identified :-)

Saturday, March 19, 2005

பா ... லாஜிக் (அ) புத்தி!

மிகுந்த யோசனைக்குப் பின் தான் இப்பதிவை எழுத முடிவு செய்தேன். காஞ்சி பிலிம்ஸ் அவர்களின் பதிவில் இடப்பட்ட பின்னூட்டங்கள் மற்றும் ரோசா எழுதிய பதிவு குறித்தும் சுய விளக்கமாக சில வெளிப்படையான கருத்துக்களை, நிதானத்துடன் முன் வைக்கிறேன்.

தாஸ் திருமா குறித்து சொன்னதை, அவர் தலித் என்பதால் அப்படி கூறப்பட்டது என்பதாக நான் முதலில் அவதானிக்கவில்லை. அதை தனி மனிதரை குறித்த ஒரு வசையாகவே எண்ணினேன் (தாஸ¤ம் அப்படித் தான் விளக்கம் அளித்திருந்தார்). அதற்கு கண்டனம் தெரிவிப்பது அல்லது தெரிவிக்காமல் இருப்பது என்ற முடிவை எடுப்பது என் சுதந்திரம் என்றபோதிலும், அது கூறப்பட்ட சூழலின் தீவிரத்தை உணராமல், தாஸ் சொன்னதை ஆமோதித்து நான் எழுதியது நிச்சயமாக தவறு தான், திருமா தற்போது பாட்டாளித் தலைவருடன் இணைந்து நடத்துவதை சந்தர்ப்பவாத அரசியல் என்று நான் நினைத்தாலும் கூட. ஆனால், ரோசா வீசிய சூடான மறுமொழியால், விவாதம் வேறு பாதையில் சென்று விட்டது! என் மறுமொழியும் சற்று கடுமையான தொனியில் அமைந்ததாகவே உணர்கிறேன். இவையனைத்திற்கும், வருத்தமும், யாரையும் நோகடித்திருந்தால், மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

தனியொரு மனிதனின் செயலுக்கு அல்லது தவறுக்கு, சாதிக்குறியீட்டை சுட்டிக் காட்டி 'பாப்பார' புத்தி அல்லது லாஜிக் என்றழைப்பது சரியான அணுகுமுறை அல்ல. (சுஜாதா பார்ப்பனர் என்பதால் ஆதரிக்கிறேன், ஆனால் திருமாவை திட்டுவதை வரவேற்கிறேன் என்பதை மேற்கூறிய லாஜிக் என்று கூறவும் / எதிர்கொள்ளவும் முடியவே முடியாது). இதனால், ஒரு சாதியினர் அனைவரும் தலித்துக்களுக்கு எதிரானவர்கள் என்று சித்தரிப்பதற்கு ஒப்பானதாகி விடுகிறது. இந்த/எந்த காலகட்டத்திலும் இது உண்மையல்ல. காலமும் மாறிக் கொண்டு தான் இருக்கிறது! மேலும், இது நிஜமான நல்லெண்ணம் கொண்டவரையும் திசை திருப்பி விடும் அபாயம் நிறைந்தது என்று நினைக்கிறேன்.

ரோசா, பல சமயங்களில், தன் கருத்துக்களை வசைச் சொற்களுடன் சேர்த்து வழங்கும் (என் அளவில் தவறான!) அணுகுமுறையை அவர் சார்ந்த சாதி (என்ன என்பது முக்கியமில்லை) சம்மந்தப்பட்ட செயல் (அவர் பாணியில் "லாஜிக்"!) என்று அப்பட்டமாக நிராகரிப்பது மடத்தனமான அல்லது தவறான வாதம் ஆகாதா? அதை ரோசாவின் எதிர் கொள்ளும் முறை என்று தானே அவதானிக்க வேண்டும். வசைகளை விடுத்து அவர் கூறும் கருத்துக்களுடன் ஒத்துப் போவதையோ அல்லது எதிர்ப்பதையோ செய்து கொண்டு தானே இருக்கிறோம்!

எல்லா சாதியினரிலும், சாதி வெறியர்களும் இருக்கிறார்கள், எல்லாரையும் சமமாகக் கருதுபவர்களும், மனிதநேயத்தை போற்றுபவரும் உள்ளார்கள் என்ற அடிப்படைக் கருத்தை மதிப்பவரிடம் / ஒப்புக் கொள்பவரிடம் தான் பேச அல்லது விவாதிக்க முடியும். இவர் இந்த சாதியை சேர்ந்ததால், இப்படித் தான் பேசுவார் / நடப்பார் என்று எண்ணும் பட்சத்தில் என்ன செய்ய முடியும்? விவாதங்கள் திசை திரும்பி வார்த்தைகள் தடித்து, அவை சண்டையில் முடியக் கூடிய சாத்தியங்களே அதிகம்! அதனால் பயன் எதுவும் இல்லை, தேவையற்றதும் கூட.

காஞ்சி பிலிம்ஸ் நண்பருக்கும், தாஸ¤க்கும், எனக்கும் கண்டனம் (சரியானது தான்!) தெரிவித்த பலரும், ரோசா குறிப்பிட்ட ... லாஜிக் பற்றி வாய் திறக்கவில்லை (கணேசனைத் தவிர, அனாமதேயங்களை கண்டு கொள்ளத் தேவையில்லை). குறைந்த பட்சமாக, 'இப்படிக் கூறுவது விவாதத்திற்கு உகந்ததல்ல' என்று கூட வலியுறுத்தாதது சற்று மன அயற்சியை அளிக்கிறது. என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே இதை எழுதினேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் நிச்சயமாக இல்லை. அது போலவே, இப்பதிவின் பின்னூட்டக் களத்தில் ஒரு சூடான விவாதத்தில் இறங்குவதில் எனக்கு விருப்பமும் இல்லை. நன்றி!

என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் - பதிவு 19

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. தேவை ஏற்படும் நாளில் அந்த சேவை செய்யலாம், மனமோ...
2. இங்கு தாலாட்டு, பள்ளியில் பாராட்டு, யாவும் நீ...
3. நாணலில் பாய் விரித்து நான் அதில் பள்ளி...
4. என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம் ...
5. சிற்றிதழ் வடிப்பதென்ன பாலோ தேனோ ...
6. உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்! ...
7. மலருக்கு வாசமுண்டு, கொடிக்கொரு கிளையுமுண்டு...
8. எந்நாளும் உறவின்றி பிரிவுமில்லை...
9. நல்ல இதயங்கள் பேசிடும் மொழியென்ன சொல் ...
10. கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி ...
11. துள்ளி ஓடும் புள்ளி மானை மல்லு வேட்டி...
12. காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால்,
சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, March 14, 2005

கண்ணோடு காண்பதெல்லாம்!

ஒரு பத்து தினங்களுக்கு முன் வீட்டுக்குள்ளேயே ஒரு சிறு விபத்து நிகழ்ந்தது! "கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது" என்று பெரியவர்கள் கூறியதன் அர்த்தத்தை அனுபவபூர்வமாக உணரும் வாய்ப்பு கிடைத்தது!!! அந்த புதன் இரவு, என் துணைவியார் எங்களது இரண்டாவது மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். நான் அருகில் அமர்ந்து 'பராக்கு' பார்த்துக் கொண்டிருந்தேன்! திடீரென்று என் மனைவியின் கைவிரல் நகம், என் இடது கண் கருவிழியில் பட்டு விட்டது. சுரீரென்று தீப்பொறி பட்டது போல் ஒரு வலி, தொடர்ந்து பயங்கர உறுத்தல்! வெளிச்சம் கண்டு கண் கூசியது. இடது கண் பார்வையும் சற்று மங்கி விட்டது போல் தோன்றியது. சாதாரணமாக எதற்கும் அதிர்ச்சியடையாத நான், கண்ணுக்கு ஆபத்து என்றதும் சற்று கலங்கி விட்டேன்!

இரவில், நேரம் அதிகம் ஆகி விட்டதால், அடுத்த நாள் காலை கண் மருத்துவரைப் போய் பார்த்தேன். கண்ணை DILATE செய்து கண் பரிசோதனைக்கான உபகரணத்தில் வைத்துப் பார்த்த மருத்துவர் 'CORNEAL ABRASION, பயப்படாதீர்கள், சரியாகி விடும்' என்றார்கள். கண்ணுக்கு மருந்தும், மாத்திரைகளும் எழுதித் தந்ததோடு, ஒரு நாலைந்து நாட்கள் டிவி / கணினி பார்ப்பதற்கும் தடா போட்டு விட்டார். என் வாழ்க்கையே கணினி என்பதால், நாலைந்து தினங்கள் லீவு போட்டே ஆக வேண்டிய சூழ்நிலை!!! ஒரு வித கட்டாய ஓய்வு என்ற நிலையில் (மனைவியும் பணிக்குச் செல்பவர் என்பதால்) இரண்டு காரியங்கள் செய்ய முடிந்தது.

ஒன்று, என் சிறிய மகளுடன் (3 வயது) அதிக நேரம் செலவிட முடிந்தது. அவளை, அருகில் உள்ள பள்ளியிலிருந்து மதியம் அழைத்து வருவது, சாப்பாடு ஊட்டுவது, பேசுவது, இருவரும் மதியம் ஆனந்தமாக AC அறையில் தூங்குவது என்று பொழுது கழிந்தது! அவளுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது தான், என் மகள் என்னமாய் பேசுகிறாள் என்று நிஜமாகவே ஆச்சரியப்பட்டேன்! இரண்டாவது, சூரியன் FM மற்றும் ரேடியோ மிர்ச்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்க முடிந்தது. பல இரைச்சலான பாடல்களுக்கு (suppose என்னை காதலிச்சா, suppose என்னை கைபிடிச்சா - வகை) நடுவே பல நல்ல இளையராஜா / MSV பாடல்களையும் ரசிக்க முடிந்தது! மௌலி அவர்களின் பேட்டி ஒன்று சிறப்பாக இருந்தது.

பொதுவாக, FM ரேடியோவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் இளைஞர்/இளைஞிகள் (சுசித்ரா, ஜீவா, பாலாஜி போன்றோர்) சின்னத்திரையில் வரும் தொகுப்பாளர்களைப் போல 'தமிழ்க்கொலை' புரிவதில்லை!!! பாடல் நிகழ்ச்சிகளை சற்று குறைத்துக் கொண்டு இன்னபிற நிகழ்ச்சிகளில் (நாடகம், க்விஸ், கவிதை) கவனம் செலுத்தினால், FM வானொலிக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. இந்த கண் உபாதையினால், ஒரு நாலு நாட்கள் அலுவலகக் கவலை இல்லாமல் நிம்மதியாகவே இருந்தேன் என்று சொல்லலாம்! இதற்குள், என் அலுவலகத்தில், என் நெருங்கிய நண்பர்களிடையே ஒரு சின்னப்புரளி புழங்கிக் கொண்டிருந்தது என்பது தெரிய வந்தது!!! அதாவது, என் வீட்டில் ஒரு சின்ன கைகலப்பு காரணமாக என் கண்ணில் அடிபட்டு விட்டது என்று!

மறுபடியும் கண் மருத்துவரிடம் சென்றபோது, இடது கண் பார்வை சற்று தெளிவு அடைந்திருந்ததை நானே உணர்ந்தேன். கண்ணை சோதித்த அவரும், காயம் ஆறியிருப்பதாகவும், முழுமையாக குணமடைய 2-3 வாரங்கள் ஆகும் என்றும், கண் மருந்தை தொடருமாறும் அறிவுறுத்தினார். இம்முறை மற்றொரு technical jargon-ஐ பயன்படுத்தினார். அதாவது, 'corneal abrasion' சரியாகி விட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக 'TRAUMATIC IRITIS' ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார். அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டேன்! தற்போது வலியும், உறுத்தலும் பெருமளவு குறைந்திருக்கிறது. இருந்தாலும், அதிக நேரம் டிவியோ கணினியோ தொடர்ந்து பார்க்காமல், கண்களுக்கு அவ்வப்போது ஓய்வு தந்த வண்ணம் இருக்கிறேன்.

கண்ணில் பட்ட இந்த அடியால், கண்ணின் அருமையை நன்கு உணர முடிந்தது! கண்களை சரியாகப் பயன்படுத்தாமல் ஒரு நான்கு நாட்களைத் தள்ளுவதே கடினமாகத் தோன்றிய எனக்கு, கண் பார்வை இல்லாத பலரின் மனவுறுதியையும், தன்னம்பிக்கையையும் வியந்து எண்ணிப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும் முடிந்தது. அந்த வரையில், இந்த கண்ணடிக்கு நன்றி!

கண்ணில் உறுத்தல் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், மனதில் ஒரு சிறு உறுத்தல்! இரு வாரங்களுக்கு முன் என் வலைப்பதிவில்
'மனைவிகளைப் பற்றி சில சங்கதிகள்! ' என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்!
என் மனைவியும் அதை (2 முறை!) படித்ததனால், சமயம் பார்த்து . . . . .
(சும்மா ஒரு ஜாலிக்குத் தான் சொல்றேன்! வலைப்பதியும் மனைவிமார்கள் Grrrrrrr என்று பாயாதீர்கள் ;-))
"கண்ணின் மணி போல, மணியின் நிழல் போல கலந்து" தான் எங்கள் இல்வாழ்வு தொடர்கிறது!!!

என்னவோ போங்கள்! மனைவிமார்களை கிண்டல் செய்து ஒரு பதிவு போட்டதற்கு, "கண் மேல் பலன்" கிடைத்து விட்டது :-((

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, March 12, 2005

பல்லவியும் சரணமும் - பதிவு 18

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வைச்சேனே...

2. பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று...

3. எனது ஆருயிர் ஜீவன் எனை ஆண்டாளே...

4. அறியாத கலையென்று எனைப் பாடு ...

5. கண்களால் என் தேகம் எங்கும் காயம் ...

6. நான் இருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான், அவன் இருக்கும் இடத்தினிலே ...

7. சங்கீத ஞானமுண்டு பாடல் நடத்த, வானம்பாடி அவள்...

8. ஒளியின் நிழலில் உறவுண்டு...

9. காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு ...

10. திருப்பதி உண்டியல் சேர்ந்து விட்டாயோ, திருவண்ணாமலை குகை புகுந்தாயோ ...

11. ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும்...

12. அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, March 10, 2005

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமளி! சாலை மறியல்!

இதுவே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. உருப்படியான
விஷயங்களை விவாதிப்பதற்காக, நம் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நேரம் செலவிடுவது மிகவும் குறைவு என்பது மக்கள் அறிந்த ஒன்றே! இவர்களது கேலிக்கூத்தை சட்டசபைக்கு வெளியிலும் அரங்கேற்ற வேண்டுமா என்பது தான் கேள்வியே! இவர்கள் நேற்று முன் தினம் செய்த சாலை மறியலும், ஊர்வலமும் பொது மக்களுக்கு எவ்வளவு பாதிப்பையும், கஷ்டத்தையும், எரிச்சலையும் தருகின்றன என்று யாராவது இவர்களுக்கு எடுத்துக் கூறினால் பரவாயில்லை. இந்த ஒரு விஷயத்தில் எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதில் சந்தேகமில்லை!

உறுப்பினர்கள் அடிக்கும் கூத்தினால், போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.
சீரியஸ்னஸ் இல்லாமல் பல சட்டப் பேரவை உறுப்பினர்கள் வம்பு பேசிக்கொண்டும், ஜோக் அடித்துக் கொண்டும் சாலையில் கும்பலாக அமர்ந்து பொதுமக்களை வெறுப்பேற்றுவது மிகவும் கொடுமை. அதையும், நமது பத்திரிகையாளர்கள் சுறுசுறுப்பாக பதிவு செய்வது மற்றொரு கொடுமை! இவர்களுக்குத் தான் வேறு வேலையில்லை என்றால், பொதுமக்களுக்கும் அப்படியா என்ன?

பலரது முக்கிய அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன / தாமதப்படுகின்றன. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றால், உடனே ஜனநாயக உரிமை பற்றி வியாக்கியானம் செய்வார்கள்! உங்கள் உரிமையை நிலைநாட்ட பொது மக்களை ஏன் இம்சை செய்கிறீர்கள்? வழக்கு தொடுங்கள், ஜனாதிபதியிடம் செல்லுங்கள், பிரதமரிடம் சொல்லுங்கள், உருப்படியாக ஏதாவது சட்டம் கொண்டு வரப் பாருங்கள்! அதை விட்டு விட்டு, சும்மா பொது மக்கள் உயிரை வாங்கிக் கொண்டு இருப்பது நியாயமில்லை! பந்த்-ஐ தடை செய்ய வேண்டும் என்று பேசுபவர்கள், இவ்வகை தடாலடி மறியல்களை ஒழிக்க வேண்டியதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.

Saturday, March 05, 2005

பல்லவியும் சரணமும் - பதிவு 17 - இளையராஜா ஸ்பெஷல்!

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. சந்தனக் காடிருக்கு தேன் சிந்துறக் கூடிருக்கு...
2. தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே...
3. மணியின் ராகம், ஒரு வானில் தவழும் மேகம்...
4. தேன் ஆடும் முல்லை நெஞ்சில் ...
5. உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது ...
6. போதை கொண்டு பூ அழைக்க தேடி வந்து ...
7. ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட ...
8. கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன் ...
9. அன்புள்ள நெஞ்சைக் காணாதோ, ஆனந்த ராகம் பாடாதோ? ...
10. தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ அம்மா ...
11. என் வீட்டில் என்றும் சந்திரதோயம் நான் கண்டேன் ...
12. மெல்லினங்கள் பாடு கண்ணே, வல்லினங்கள் வாய் வலிக்கும் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, March 01, 2005

மனைவிகளைப் பற்றி சில சங்கதிகள்!

என் மனைவி கலங்கடிக்கும் வண்ணம் உடுத்துவாள். அவள் சமைப்பதும் ஏறக்குறைய அப்படித் தான் இருக்கும்!
--- ஹென்னி யங்மேன்

என் மனைவியும் நானும் 20 ஆண்டுகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். பின்னர் சந்தித்தோம்!
--- ராட்னி டேஞ்சர்·பீல்ட்

ஒரு நல்ல மனைவி தன் கணவனை நிச்சயம் மன்னித்து விடுகிறாள், அவள் தவறு செய்யும்போது!
--- மில்டன் பெர்ல்

ஒரு நீதிபதி முன்னிலையில் என் திருமணம் நடந்தது. அச்சமயம் நான் உணரவில்லை ஒரு ஜூரியை அழைத்திருக்க வேண்டும் என்பதை!
--- ஜார்ஜ் பர்ன்ஸ்

ஒரு மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வின் ரகசியம், ரகசியமாகவே இன்று வரை இருந்து வருகிறது!

நான் என் மனைவிக்கு ஒரு புதிய காரை பரிசாக வழங்கினேன். சற்று நேரத்தில் என்னை தொலைபேசியில் அழைத்த அவள், கார்பரேட்டரில் தண்ணீர் இருப்பதாகக் கூறினாள். நான் கார் எங்கே என வினவியதற்கு, அவள் அது ஏரியில் இருப்பதாக பதிலுரைத்தாள்!!!

--- ஹென்னி யங்மேன்

மனதில் கோபத்தோடு, உறங்கச் செல்லாதீர்கள்! விழித்திருந்து சண்டை போடுவது எவ்வளவோ மேல்!!!
--- ·பில்லிஸ் டில்லர்

X: என் மனைவி ஒரு தேவதை!
Y: நீ அதிர்ஷ்டக்காரன்! என் மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறாள்!

ஒருவர் தனது மனைவியின் பிறந்த நாளை எந்த சூழ்நிலையிலும் மறக்காமல் இருக்க ஒரே சிறந்த வழி, அதை ஒரே ஒரு முறை மறந்து விடுவது தான்!!!

திருமணத்தால் ஏற்படும் சிறந்த விஷயங்களில் ஒன்று என நான் கருதுவது, ஒரு கணவனாகவும், தந்தையாகவும் சொல்ல நினைப்பவற்றை நான், என் வீட்டில், வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்ல முடிகிறது. என்ன, யாரும் அவற்றுக்கு துளியும் காது கொடுப்பது கிடையாது!!!

திருமணம் என்பது புத்திசாலித்தனத்தின் மீதான கற்பனையின் வெற்றி!
இரண்டாவது திருமணம் என்பது அனுபவத்தின் மீதான நம்பிக்கையின் (!) வெற்றி!!

அமெரிக்காவில், திருமணமானவர்களில் 80 சதவிகிதம் பேர், தத்தம் மனைவிகளை ஏமாற்றுகின்றனர். மீதமுள்ளோர், ஐரோப்பா சென்று ஏமாற்றுகின்றனர்!!!

திருமணம் ஆகும் வரை உண்மையான மகிழ்ச்சி என்றால் என்னவென்பதை நான் உணரவில்லை! ஆன பின், காலம் கடந்து விட்டது!!!

கடந்த 18 மாதங்களாக நான் என் மனைவியுடன் பேசவில்லை! அவள் பேசும்போது குறுக்கிட எனக்கு விருப்பமில்லை என்பதால்!!!

என்றென்றும் அன்புடன்,
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails